கப்ராலின் பொறுப்பில் இருந்த பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன – அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

Thursday, October 7th, 2021

அஜிட் நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அஜிட் நிவாட் கப்ரால் அண்மையில் பதவி விலகிப் பின்னர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம் பெற்றிருந்தார்.

இதனையடுத்து அந்த அமைச்சின் செயற்பாடுகள், பொறுப்புக் கள், முன்னுரிமை, குறித்த நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு ஆகியவற்றை நிதியமைச்சின் கீழ் கொண்டு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாடு முழுவதும் மீண்டும் நடைமுறைக்கு வந்தது ஊரடங்கு – யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் வைரஸ் தொற்று...
வருமானத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் பூர்த்தி - வறுமையொழிப்பு தொடர்பான ஜ...
உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள் - வர்த்தகர்களிடமும் பொது மக்களிடமும் யாழ்ப்பாண வணி...