கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயார் – அமெரிக்கா உறுதி!.
Tuesday, July 2nd, 2024
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை (01) நிதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே, திறைசேரியின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் றொபேட் கப்ரோத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை சரியான திசையில் பயணிப்பதால், ஏனைய நாடுகள் கடன் மறுசீரமைப்பு தொடர்பில், தமது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, நிதி இராஜாங்க அமைச்சர் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு, அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
யாழ். மாநகர சபை ஆணையாளர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
வாகன விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை : வடமாகாண ஆளுநர் கூரே!
யாழ் மாவட்ட இராணுவத் தளபதிக்கு இடமாற்றம்!
|
|
|


