கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 721 பேருக்கு கொவிட் தொற்று!

Friday, July 23rd, 2021

நாட்டில் கடந்த 24 மணிநெரத்தில் ஆயிரத்து 721 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய ஆயிரத்து 714 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 91 ஆயிரத்து 298 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து இதுவரையில், 2 இலட்சத்து 64 ஆயிரத்து 755 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் 42 பேர் கொவிட் தொற்றால் உயிரழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்றுமுன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் 25 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு கொவிட் தொற்றினால் உயிரிழநதுள்ளனர். இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை, 3 ஆயிரத்து 959 ஆக உயர்வடைந்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தாமரை மொட்டின் வெற்றி திருமலை மாகளின் குரலை நாடாளுமன்றிலும் ஒலிக்க வைக்கும் - யாழ் மாநகர முன்னாள் மு...
அச்சத்திற்கு அடிபணியாமல் நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டும் - உலக மக்களுக்கு பாப்பரசர் ...
பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுடன் நாடாளுமன்றில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து ...