கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் எச்சரிக்கை!

Wednesday, June 14th, 2023

கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO ) கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச சிறுவர்  தொழிலாளர் எதிர்ப்பு தினமான நேற்று, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே  இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் 160 மில்லியன் சிறுவர்கள்  ( உலக சிறுவர் எண்ணிக்கையில் பத்தில் 1 மடங்கு ) சிறுவர் தொழிலாளராக இனம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 80 மில்லியன் சிறுவர்களின் உடல் மற்றும்  மன ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: