கடந்த வருடம் குடாநாட்டில் 207 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!
Thursday, February 9th, 2017யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த வருடம் யாழ் மாவட்டதில் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவற்றுள் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களுக்கு எதிராக 54 முறைப்பாடுகளும், சிறுவயது திருமணம் தொடர்பாக 24 முறை ப்பாடுகளும், உடலியல் ரீதியான துஸ்பிரயோக முறைப்பாடுகள் 11, உளவியல் ரீதியான துஸ்பிரயோகம் 43, பாலியல் துஸ்பிர யோகம் 25, சிறுவர் அலட்சியம் தொடர்பான முறைப்பாடு 24, குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக 15 முறைப்பாடுகள், வேறு விதமான முறைப்பாடுகள் 11 என மொத்தமாக 207 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என தெரிவித்தார்.
Related posts:
|
|