நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க உறுதிபட தெரிவிப்பு!

Friday, March 29th, 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டிய நிலை உருவானாலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எவ்வித தாக்கமும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனவும் ஆணைக்குழு கோரிய 10 பில்லியன் ரூபா நிதி அமைச்சிடம் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதால் உரிய காலக்கெடுவிற்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 17 ஆம் திகதிமுதல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்குள் நடைபெறும் எனவும், ஜுலை அல்லது ஒகஸ்ட் மாதத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: