கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை வீழ்ச்சி – தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு!
Wednesday, September 16th, 2020
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 29 ஆயிரத்து 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகையில் 17,854 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வொல்பெகியா பெக்டீரியாவுடன் கூடிய நுளம்புகள் சூழலில் பரவியுள்ளதுடன் அவை விருத்தியடைய 6 மாதங்கள் செல்லும் என வைத்தியர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பயங்கரவாதத்தினை ஒழித்தோம் எனக் கூறும் அரசாங்கத்திற்கு ஏன் போதைப்பொருள்களை கட்டுப்படுத்த முடியாமல் இ...
அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது - அணுசக்தி ஒழு...
"பவானி" வீதி விடுவிப்பு - ஜூன் மாதம் 25ஆம் திகதி கட்டளை வழங்கப்படும் என திகதியிட்டது நீதி...
|
|
|


