அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது – அணுசக்தி ஒழுங்குமுறை கவுன்சில் அதிகாரிகள் தெரிவிப்பு!

Friday, February 23rd, 2024

இலங்கை மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக அணுசக்தி ஒழுங்குமுறை கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்பு குழு கூடிய போது குறித்த அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

அத்துடன், இதற்குத் தேவையான மனித வளமும், தேவையான உபகரணங்களும் தம்மிடம் இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: