கடந்த வருடத்தில் வடக்கில் மட்டும் 123 சிறுவா்கள் பாலியல் துஸ்பிரயோகம்!

Thursday, February 22nd, 2018

கடந்த வருடம் வடக்கு மாகாணத்தில் 123 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதுடன், 11 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக நன்நடத்தை சிறுவர்பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட யாழ்.மாவட்டத்திலேயே சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து காணப்படுவதாக குறித்த புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக  யாழ்ப்பாணத்தில் 45 சிறுவர்களும், முல்லைத்தீவில் 10 சிறுவர்களும், மன்னாரில் 11சிறுவர்களும், வவுனியாவில் 27 சிறுவர்களும், கிளிநொச்சியில் 30 சிறுவர்களுமாக மொத்தம் 123 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சி மேற்கொண்டதில் யாழ்ப்பாணத்தில் 7 சிறுவர்களும், முல்லைத்தீவில் 6 சிறுவர்களும், மன்னாரில் 6 சிறுவர்களும், வவுனியாவில் 5சிறுவர்களும், கிளிநொச்சியில் 14 சிறுவர்களுமாக மொத்தம் 38 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல உடல் ரீதியான முறைகேட்டுக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் 15 சிறுவர்களும், முல்லைத்தீவில் 6 சிறுவர்களும், மன்னாரில் 14 சிறுவர்களும்,வவுனியாவில் 9 சிறுவர்களும், கிளிநொச்சியில் 23 சிறுவர்களுமாக மொத்தம் 67 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் ஒருவரும், முல்லைத்தீவில் 7 சிறுவர்களும், மன்னாரில் 21 சிறுவர்களும், வவுனியாவில்ஒருவரும், கிளிநொச்சியில் 9 சிறுவர்களுமாக மொத்தம் 39 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக யாழ் மாவட்டத்தில் 3 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 4 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் ஒருவரும்,கிளிநொச்சி மாவட்டத்தில் 6 சிறுவர்களுமாக மொத்தம் 14 சிறுவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள் என  யாழ் மாவட்டத்தில் 23 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 6 சிறுவர்களும்,வவுனியா மாவட்டத்தில் 13 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 13 சிறுவர்களுமாக மொத்தம் 67 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: