ஒமிக்ரோன் கொரோனா நாட்டில் நுழைவதைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் நாமல் அறிவிப்பு!
Monday, November 29th, 2021ஒமிக்ரோன் கொடிய கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆறு நாடுகள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூன்று நாட்களுக்கு முன்னர் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சும் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வழங்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசி, ஒமிக்ரோன் வைரஸை உலக நாடுகள் அறிவதற்கு முன்னர் முதன்முதலாக செலுத்தியுள்ளதாகவும், ஜனாதிபதியும் அரசாங்கமும் இதில் விசேட அக்கறை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதார பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டிலிருந்து வருகைதரும் அனைத்துப் பயணிகளின் உடல் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இது தொடர்பாக ஒரு சிறப்பு செயலியைக் கூட அறிமுகப்படுத்தியுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|