மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது – மத்தியவங்கியின் ஆளுநர் அறிவிப்பு!

Wednesday, January 5th, 2022

இலங்கை மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி கணக்குகளில் காணப்படும் டொலர் பெறுமதிகள் இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்றது என சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தரவிற்கு அமைய வணிக வங்கிகள் இவ்வாறு தங்களது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளில் காணப்படும் அந்நிய செலாவணி பெறுமதிகளை இலங்கை ரூபாவிற்கு மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில நாசகார சக்திகள் இவ்வாறு போலித் தகவல்களை பரப்பி வருவதாகவும் இந்த வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அஜித் நிவாட் கப்ரால் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை – பரிசோதனைகள் தொடர்கின்றன - யாழ் போதனா வைத்தியசாலை ப...
தவறிழைத்த அரச அதிகாரிகள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவியுங்கள் – வடக்கின் ஆளுநர் கோரிக்கை!
அரசாங்கம் முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்களில் எவ்வித குறைப்பாடும் இல்லை – அமைச்சர் விமல் வீரவன்ச சு...

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 32 வீதமாக குறைவடைந்துள்ளன - நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு!
பாடசாலை சூழலே சிறுவர்களுக்கு உகந்தது - கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களிடம் ...
நிதி கையாடல் தொடர்பில் விவசாயிகள் முறைப்பாடு - ஒரு வாரத்திற்குள் கணக்காய்வுக்கு உட்படுத்தி அறிக்கை ...