பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு !

Sunday, June 23rd, 2019

தொடருந்து தொழிற்சங்கள் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. ஆனாலும் கோரிக்கைக்கு உரிய தீர்வு பெற்று கொடுக்கப்படும் வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியால தொடருந்து தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தொடருந்து ஒழுங்குப்படுத்தல் சங்கத்தின் பிரதான செயலாளர் பீ.எம்.டீ.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பல்வேறுப்பட்ட கோரிக்கைளை முன்வைத்து கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் தொடருந்து இயந்திர சாரதிகள், ஒழுங்குப்படுத்தல், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் ஆகியோர் இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்காரணமாக பாதிக்கப்பட்டிருந்த தொடருந்து போக்குவரத்துக்கள் இன்று மாலை அளவில் வழமைக்கு திரும்பும் என தொடருந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக தொடருந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுறுத்தப்பட்ட போதும் தங்களது கோரிக்கைக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரை ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் நள்ளிரவு 12 முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தொடருந்து தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றிரவு கூடிய தொடருந்து தொழிற்சங்கங்கள் இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. தொடருந்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட தொடருந்து தொழிற்சங்க போராட்டம் நள்ளிரவுடன் நிறைவடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: