கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை வழங்கியது இந்தியா!

Sunday, June 12th, 2022

இந்தியா கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை அதாவது 6 பில்லியன் டொலர்களை நிவாரண கடனாக வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவற்றில் அதிகளவான கடன் இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய தொகை இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு, மருந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர பல ஆசிய நாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கூட்டுக் கடனை செலுத்துவதையும் இந்திய அரசு பொறுப்பேற்றுள்ளது.

இதனடிப்படையில் இந்தியா, கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கைக்கு சுமார் 600 கோடி டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.

இதனிடையே கமத்தெழிலுக்கு தேவையான உரத்தை கொள்வனவு செய்யவும் இந்தியா 55 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதுடன், அது சம்பந்தமான உடன்படிக்கை சில தினங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டது.

அத்துடன் எரிபொருளை கொள்வனவு செய்யவதற்காக இலங்கை அரசு இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர்களை கடனாக பெற எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது..

000

Related posts: