கடந்த ஆண்டின் உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயார் நிலையில் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, October 15th, 2020

2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் தயாரிக்கப்பட்டுள்ள வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என அந்த ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்ற நிலையில் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாகவே வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

தற்போது க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்று வருவதால் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி பணிகளை மேற்கொள்வதற்கு தேசிய எழுச்சி மாநாடு உந்துதலை தந்துள்ளது. சிவா
புதிய அரசியலமைப்பு சிறந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கின்றேன் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹ...
கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை தொடர்சியாக முடக்கி வைக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் அஜித்...