ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக 23 ஆயிரம் கோடி !

Sunday, December 17th, 2017

அடுத்த வருடத்தில் ஓய்வூதியக் கொடுப்பனவைச் செலுத்துவதற்காக அரசாங்கம் 23 ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவிக்கையில் இவ்வருடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையிலும் பார்க்க 1300 கோடி ரூபா அடுத்த வருடத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெறுவோரின் எண்ணிக்கை 6 இலட்சத்து 30 ஆயிரமாகும.; வருடந்தோறும் 25 ஆயிரத்திற்கும் 30 ஆயிரத்திற்கும் இடைப்பட்டோர் இதில் புதிதாக இணைந்து கொள்கின்றனர் என்று தெரிவித்தூர்

Related posts: