உக்கிரம் கொள்ளும் பன்றிக் காய்ச்சல் – இந்தியாவில் 226 பேர் பலி!

Thursday, February 7th, 2019

இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின்  ராஜஸ்தான் மாநிலம் அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அங்கு மாத்திரம் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும் 2,263 பேருக்கு இன்புளூவன்சா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Related posts: