ஓய்வு பெற்றவர்களுக்காக இன்றுமுதல் இலவச ரயில் டிக்கட் – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு!

Wednesday, February 19th, 2020

இலங்கையில் ஓய்வு பெற்றவர்களுக்காக இலவச ரயில் டிக்கட்களை வழங்கும் நடவடிக்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இலவச சேவையை வயோதிபர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் இன்றுமுதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஓய்வு பெற்றவர்கள் தங்கள் அடையாள அட்டையை நேரடியாக ரயில் நிலையத்தில் ஒப்படைப்பதன் மூலம் இலவச ரயில் டிக்கட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் இணைந்து இந்த முறையை நடைமுறையை அறிமுகம் செய்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts: