டாக்காவில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Saturday, May 13th, 2023

பங்களாதேஷின் டாக்காவில் நடைபெறும் ஆறாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இலங்கையின் தூதுக்குழுவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் அடங்குவார். என குறிப்பிடப்பட்டுள்ளது

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று டாக்காவில் ஆறாவது இந்திய பெருங்கடல் மாநாட்டை ஆரம்பித்து வைக்கிறார்.

மாநாட்டின் ஆறாவது பதிப்பை வங்காளதேச அரசின் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து இந்தியா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மாநாடு (IOC) 2016 இல் தொடங்கப்பட்டது மற்றும் கடந்த ஆறு ஆண்டுகளில் இது பிராந்திய விவகாரங்களில் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கான “முதன்மை ஆலோசனை மன்றமாக” உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: