இறை­வரி திணைக்­கள அதி­கா­ரிகள் வேலைநிறுத்தம்!

Friday, July 7th, 2017

புதிய தேசிய வரு­மான வரி திருத்த சட்ட மூலத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்று தேசிய இறை­வரி திணைக்­கள அதி­கா­ரிகள் ஒருநாள் அடை­யாள வேலை நிறுத்த போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தேசிய வரு­மான வரி திணைக்­க­ளத்தின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்கம் அறி­வித்­துள்­ளது.

புதிய வரு­மான வரி திருத்த சட்­ட­மூ­லத்­ தினால் மக்­களின் அத்­தி­யா­வ­சிய பொருட் ­களின் விலை­யா­னது மேலும் பாரி­ய­ள வில் அதி­க­ரிக்கும் வாய்ப்­புள்­ளது. இது தொடர்பில் அர­சாங்கம் எம்­முடன் பேச்­சுக்­களை நடத்­தா­விடின் தொழிற்­சங்க போரா ட்டம் தீவி­ர­ம­டையும் எனவும் தேசிய வரு­மான வரி திணைக்­க­ளத்தின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்தின் தலைவர் எச்.ஏ.எல். உதயசிறி தெரி­வித்தார்.மரு­தானை சன­ச­மூக நிலை­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊடக­வி­ய­லா ளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரி விக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts: