இறைவரி திணைக்கள அதிகாரிகள் வேலைநிறுத்தம்!
Friday, July 7th, 2017
புதிய தேசிய வருமான வரி திருத்த சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தேசிய இறைவரி திணைக்கள அதிகாரிகள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
புதிய வருமான வரி திருத்த சட்டமூலத் தினால் மக்களின் அத்தியாவசிய பொருட் களின் விலையானது மேலும் பாரியள வில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் எம்முடன் பேச்சுக்களை நடத்தாவிடின் தொழிற்சங்க போரா ட்டம் தீவிரமடையும் எனவும் தேசிய வருமான வரி திணைக்களத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் எச்.ஏ.எல். உதயசிறி தெரிவித்தார்.மருதானை சனசமூக நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரி விக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
Related posts:
|
|