ஒற்றையாட்சியின் கீழேயே அதிகாரப் பகிர்வு – பிரதமர் ரணில்

Wednesday, May 3rd, 2017

ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையிலேயே அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்

புதிய அரசமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றம் அவர் உறுதியளித்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ரணில் உரையாற்றினார்.

புதிய அரசமைப்பு குறித்து இடைக்கால அறிக்கை அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். தற்போதைய சூழலில் பல விடயங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் மதத் தலைவர்களுடனும் பொது மக்களிடமும் கலந்துரையாட வேண்டியுள்ளது.

அனைத்துத் தரப்பினருடைய பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அரசமைப்பு கொண்டு வரப்படும். நாட்டை இரண்டாகப் பிளவுப்படுத்தாது ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும். ஒற்றையாட்சியின் அடிப்படையில் அதிகாரத்தைப் பகிர்ந்நு கொண்டு நாட்டை எவ்வாறு முன்நோக்கிக் கொண்டு செல்வது என்று மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். புதிய அரசமைப்பினூடாக ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாப்பதுடன், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.

Related posts: