அமைதியான போராட்டங்கள் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்து விளைவிக்க குழுக்கள் முயற்சி – நாடாளுமன்ற உறுப்பினரான காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டு!

Wednesday, April 6th, 2022

அமைதியான போராட்டங்கள் என்ற பெயரில் அரசாங்கத்துடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த சில குழுக்கள் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு படையினருக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்குமாறு இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டங்களின் போது வன்முறைச் செயல்களுக்குப் பின்னணியில் அரசியல் குழுக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான தீர்மானத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு சபாநாயகரிடம் அவர் வலியுறுத்தினார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுமையை கோழைத்தனமாக தனிநபர்கள் கருதுகின்றனர்.

ஜனநாயக கட்டமைப்பிற்குள் செயற்பட்டால் நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் 113 பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: