நாடாளுமன்ற உறுப்பினர்களின்  கொடுப்பனவு அதிகரிக்கவேண்டும் – பிரதமர்!

Saturday, November 19th, 2016

நாடாளுமன்றத்தையும் அதன் செயற்பாடுகளையும் பலப்படுத்தவேண்டுமாயின், எம்.பிக்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற, வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான், கொழும்பில் இருப்பதனால் எனக்கு பிரச்சினையிருக்கவில்லை. ஆனால், வெளிமாவட்டங்களில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்க்கவேண்டும். அதற்கான எம்.பிகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்கவேண்டும் என்றும் கூறினார்.

Untitlasded-1

Related posts: