ஒரு வருட சிறைவாசத்திற்குப் பின்னர் அனுர பிணையில் விடுதலை!
Friday, June 2nd, 2017
முன்னாள் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காக,அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், ஒரு வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுர சேனாநாயக்கவுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைகளுக்காக சென்றிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலிகாமம் தெற்கு கலாஜோதி சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்...
“போட் சிட்டி”யில் நடைப்பாதை திறப்பு – இலங்கையின் அரச தலைவர்கள் பங்கேற்பு!
தேர்தலை நடத்த 10 பில்லியன் செலவு - 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்...
|
|
|


