தேர்தலை நடத்த 10 பில்லியன் செலவு – 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிப்பு!

Saturday, December 10th, 2022

உள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் இறுதி வாரத்தில் கோரப்படும் என ஆணைக்குழு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் திருத்தம் சட்டத்தின் விதிகளின்படி வேட்புமனுக்கள் கோரப்படும் என்று தேசிய தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மட்டத்தில் 2022 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அதன்படி 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

20 ஆவது திருத்தம் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நிலைப்பாடுகளும் இல்லை - அமைச்சர் விமல் வீ...
ரணிலுக்கு அதிகாரம் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்ப...
பாடசாலைகளில் பாலியல் கல்வி - கல்வி சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரே...