ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க முயற்சி – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!
Wednesday, April 21st, 2021இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 59 விளையாட்டு வீரர்கள் தொழில் ரீதியில் ஒப்பந்தங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .
அத்துடன் மஹேல ஜெயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் மூலம் தேசிய விளையாட்டுதுறையை மேம்படுத்துவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவின் கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
Related posts:
தகவல் ஆணைக்குழுவை அமைக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்!
யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கண்காட்சி
நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து ஆள்மாறாட்ட மோசடிக்கு முயற்சி- மத்திய வங்கி எச்சரிக்கை!
|
|