ஏப்ரல் 8 இல் தொண்டர் ஆசிரியர் நேர்முகம் !
Thursday, May 2nd, 2019
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பின் தரம் ii க்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சைகள் 08 ஆம் 09 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுளது.
யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் இது நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் கடந்த 22 ஆம் திகதி தொடக்கம் நடைபெறவிருந்த நிலையில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் பிற்போடப்பட்டது.
வடக்கு மாகாணத்தை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்டதொண்டராசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.
Related posts:
நாடாளுமன்றில் விவாதிக்க முடியாமல் போனவை குறித்து சபை முதல்வர்!
பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு மின்கலங்களின் பாகங்கள் தயாரிப்பு!
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதி பற்றாக்குறை – பணிப்பாளர் சத்தியமூர்த்தி !
|
|