ஒருநாள் அடையாளப் பணிப் புறக்கணிப்பில் வைத்தியர்கள் !

Tuesday, January 30th, 2018

ஒருநாள் அடையாளப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை இன்று(30) காலை 8 மணி முதல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போராட்டம் சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று தாம் போராட்டத்தில் ஈடுபடக் காரணம் தமது கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அலட்சியமாக இருப்பதே என அரச மருத்துவ அதிகாரிகள்சங்கத்தின் செயலாளர் ஹரித் அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

Related posts: