சீருடை வவுச்சர் முறையினை இரத்து செய்ய கோரிக்கை!
Saturday, April 23rd, 2016
2017ஆம் ஆண்டு முதல் பழைய முறையின் கீழ் பாடசாலை சீருடைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கோரிக்கையடங்கிய கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வவுச்சர் முறையின் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கியிருந்த அழுத்தங்களை கருத்திற்கொண்டு இக்கோரிக்கையினை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே 2017 ஆம் ஆண்டு முதல் பழைய முறையின் பாடசாலை சீருடைத் துணியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது!
அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை, விருப்பு வாக்கு முறைகளில் மக்களின் நம்பகத்தன்மை வெகுவாக கு...
நாளைஇலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் மோடியின் விஜயம் தொடர்பில் விசேட கலந்துரை...
|
|
|


