பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது!

Tuesday, April 30th, 2019

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத  தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது.

உறவினர்கள் நண்பர்கள் உயிரிழந்தவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் காயமடைந்தவர்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

இதற்காக தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

கொழும்பு மாவட்டத்திலுள்ளவர்கள் 0711 333 330 திருமதி. குமாரியுடனும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளவர்கள் 0703 762 997 பிரேமகுமாருடனும் கம்பஹா மாவட்டத்திலுள்ளவர்கள் 0703 728 985 ருவனுடனும் மேலதிக தகவல்களுக்கு 071 433 3331 நவீந்திரனுடனும் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய தகவல்களை அறிந்துக்கொள்ள www.redcross.lk எனும் இணையத்தளம் மூலமும் E-mail :info@redcross.lk என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்புகொள்ள முடியும்.

Related posts:


நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.டி.பியிடம் திருமலை மனையாவெளி கடற...
நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்போவதில்லை - நிதி அமைச்சர் பசில் உறுதிபடத் ...
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் எ...