ஏப்ரல் முதல் புதிய உள்நாட்டு தீர்வைச் சட்டம் அமுல்!

Wednesday, March 21st, 2018

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் எளிமையான சீரான தீர்வைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் புதிய இறைவரி சட்டம் அமுலுக்குவரவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரசிறைத் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த புதிய சட்டம் பற்றி விளக்கிக் கூறும் கருத்தரங்கிலேயே அமைச்சர் மேற்கண்டவாறுதெரிவித்திருந்தார்.

புதிய சட்டம் தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்;

நாட்டின் வருமானம் அதிகரித்த போதிலும் அதற்கு ஏற்ற வகையில் வருமான வரி அதிகரிக்கவில்லை. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வரி மூலம்கிடைக்கும் வருமானம் கீழ் மட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்திக்கும் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் முன்னேற்றத்திற்கும் வரி வருமானம் அத்தியாவசியமானது.

எனவே வரி செலுத்த வேண்டிய அனைவரும் வரி செலுத்துவதை சமூக கடமையாகக் கருத வேண்டும் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்களசமரவீர கேட்டுக் கொண்டார்.

Related posts: