எல்லை நிர்ணயவிவாதத்திற்கு பின்னர் தேர்தல் குறித்து தீர்மானம்!

Friday, August 10th, 2018

மாகாண சபை தேர்தலை புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா நடாத்துவது என்பது தொடர்பில் புதிய முறையின் கீழான எல்லை நிர்ணயம் குறித்த விவாதத்திற்கு பின்னர் தீர்மானம் ஒன்றினை எட்ட பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கையானது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அது குறித்த விவாதத்திற்கு பின்னர் தீர்மானம் ஒன்றுக்கு வர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் தலைமையில் கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: