பொறியியல் பீடங்களுக்கு அதிக மாணவர்களை உள்ளீர்க்கை – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்!
Saturday, September 19th, 2020இலங்கை பல்கலைக் கழகங்களின் பொறியியல் பீடங்களுக்கு அதிக மாணவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் உள்ள 6 பொறியியல் பீடங்களுக்குமாக மேலும் 405 மாணவர்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதான பொறியியல் பீடங்கள் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களான பேராதனை, ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், ருகுணு, மொரட்டுவ மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கே இவ்வாறு மாணவர்களை அதிகரிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களுக்கு பல்வேறு சலுகைகள்: பெரமுன வேட்பாளர் கோத்தாபய அறிவிப்பு!
நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்தது - சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை!
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; மகப்பேறு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
|
|