“எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு நன்றி – தடுப்பூசி பெற்றமை தொடர்பில் மக்கள் தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021

“எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கான நேரம் இது”. இதனூடாகவே நாம் எம்முடன் இருப்பவர்களையும் அயலில் உள்ளவர்களையும் மட்டுமல்லாது எமது பிரதேசத்தையும் நாட்டையும் பேராபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என யாழ் மாவட்டத்தில் இன்றையதினம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அச்சுறுத்தல் மிக்க இந்த நேரத்தில் எமது மாவட்டத்தின் தேவைக்கேற்ற அதை பெற்றுத்தந்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது ஆதரவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியூடாக சுகாதார துறையினர் முன்னெடுத்துவரும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றனர்.

கொரோனா தொற்று நாட்டில் அதிகரிந்துள்ள நிலையில் அதனை கட்டப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தொற்றாளர் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருவதை சகாதார பிரிவினர் சுட்டிக்காட்டிவரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அண்மையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் சீன மக்கள் குடியரசு நன்கொடையாக வழங்கிய 16 இலட்சம்  சினோபார்ம் தடுப்பூசிகளை கையளித்திருந்தார்.

குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகையில் – இக்கட்டான சூழலில் தேவையானளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றமையானது வடக்கு கிழக்கில் வாழும் 30 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதுவதாகவும் கிடைத்த இந்த பாக்கியத்தை எமது மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் குறித்த தடுப்பூசிகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய முன்னுரிமை அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு 2 இலட்சம் தடுப்பூசிகளும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளும் வவுனிய மாவட்டத்திற்கு 75 ஆயிரம் தடுப்பூசிகளும்  பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தனர்.

இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றையதினம் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன.

இதன்படி, சங்கானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், காரைநகர், கரவெட்டி, ஊர்காவற்துறை, கோப்பாய், மருதங்கேணி, நல்லூர், பருத்தித்துறை, தெல்லிப்பளை, உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே 50 ஆயிரம் பெர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ள நிலையில் மேலும் 50 ஆயிரம் பேர் ஒரு செலுத்துகையை பெற்றுள்ளனர். இந்நிலையில் அரசினால் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கவென வழங்கப்பட்டுள்ள மேலும் இரண்டு இலட்சம் தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதிலும் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று காலைமுதல் செயற்படுத்தப்படுகின்றது.

இதனடிப்படையில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது

இதேவேளை இன்றையதினம் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மக்கள் கருத்துக் கூறும்போது –

இந்நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை நேரில் சென்று அவதானித்து மக்களுக்கு தடுப்பூசி தொடர்பில் விழிப்புணர்வுகளை மேற்கொண்டபின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் கருத்து தெரிவிக்கையில் –

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்த வருவதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டிவரும் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி காரணமாக இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கிடைத்த இந்த சந்தரப்பத்தை கைநழுவ விடாது பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முயற்சிக்க வெண்டம்.

தடுப்பூசியே இந்நோயை இல்லாதொழிப்பதற்கான ஒரே வழி. எனவே மக்கள் தாமதமின்றி உங்கள் ஒவ்வொருவரது இல்லங்களுக்கு அண்மையில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்று அதனை பெற்றுக்கொள்வது உங்களுக்கம் உங்கள் சுற்றத்துக்கும் பாதுகாப்பை தரும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: