எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் திறக்கப்படும் என தகவல்!

இலங்கையில் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கபபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே மீளவும் திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
முழுமையாக அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்டங்களாக பாடசாலை வகுப்புகளை நடத்திச் செல்வது குறித்து ஆராயப்படுகிறது.
எவ்வாறாயினும் கொரோனா பரவல் தொடர்பில் அப்போதுள்ள நிலைமையை வைத்து அதற்கேற்ப இறுதி நேர முடிவுகள் மேற்கொள்ளப்படுமென கல்வியமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டன .தனியார் பாடசாலைகளையும் அந்த காலப்பகுதியில் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 வீதத்திற்கு மேல் பேணப்படும்– ரவி கருணாநாயக்க!
இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன - பொது பாதுகாப்ப...
|
|