எதிர்வரும் 22ஆம் திகதி ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையிடம்!

Tuesday, July 18th, 2017

 

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.

இலங்கை கடற்படைக்கு மிகப் பெரிய இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை 1000 கோடி ரூபா செலவில் கட்டுவதற்கான உடன்பாடு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்திடப்பட்டது.

இதற்கமைய கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட முதலாவது கப்பல் ஜூலை 22ஆம் நாள் இலங்கை கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.105m நீளமான- 2400 எடை கொண்ட இந்தப் போர்க்கப்பல், இலங்கை கடற்படையினால் எதிர்வரும் ஓகஸ்ட் 2ஆம் திகதி சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது கப்பல் 2018 பெப்ரவரியில் – திட்டமிடப்பட்டதற்கு 3 மாதங்கள் முன்கூட்டியே ஒப்படைக்கப்படும்.குறித்த இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள், கப்பல்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகள், கடல்சார் கண்காணிப்பு, ஆழ்கடல் நிலைகளின் பாதுகாப்பு, மற்றும் அதிக பெறுமானம் கொண்ட கப்பல்களின் பாதுகாப்பு என பல்வேறு பங்குகளை ஆற்றக் கூடியவை.

25 கடல் மைல் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்தக் கப்பல்களில், ஒரு உலங்குவானூர்தி தரித்திருப்பதற்கான வசதிகளும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: