எதிர்வரும் 20 ஆம் திகதி வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை!
Wednesday, April 18th, 2018
இம்முறை தமிழ் – சிங்கள புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்பட்டமையினால் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக் கிழமை அரை நாள் வங்கி விடுமுறையாகஇலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன் காரணமாக 20ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கலும் மதியம் 12.00 மணிக்கு நிறைவுக்கு வரும். இது குறித்து கொழும்பு பங்குச் சந்தையின் பிரதானஒழுங்குமுறை அதிகாரி தரகு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.
குறித்த அரை நாள் விடுமுறை வங்கிகளுக்கு மாத்திரமே தவிர வேறு எந்தவொரு அரச நிறுவனங்களுக்கோ அல்லது வியாபார நிலையங்களுக்கோ பொதுவான விடுமுறை அல்ல எனவும்தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அடுத்த மாதம் அறிமுகிறது ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் !
மடு தேவாலயத்தில் பிரதமர் ரணில்!
ஆபத்தை நெருங்கியுள்ளோம் – வைத்தியசாலைகளின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இடமில்லை - இராஜாங்க அமைச்சர் ச...
|
|
|


