எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை அமுல்!
Sunday, April 1st, 2018
எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள அமெரிக்க ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை அமுலுக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் இதனூடாக பெரும் நன்மை அடைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு தற்போது இலங்கை ஏற்றுமதியாளர்கள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி.எஸ்.பீ. வரிச்சலுகை ஆவணத்தில் கைச்சாத்திட்ட நிலையில், இலங்கை உட்பட 120 நாடுகள் இந்த சலுகையினை பெறவுள்ளன.
இதற்கமைய இந்த 120 நாடுகளும் சுமார் 5 ஆயிரம் பொருட்களை வரிச்சலுகையுடன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மழையுடனான காலநிலை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் - அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் ...
கனடாவுக்கு சட்டவிரோத பயணம் - பிடிபட்டவர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள் என தகவல்!
|
|
|


