ஊர்காவற்றுறை பிரதேச சபையை பெறுப்பேற்றது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Tuesday, March 20th, 2018

ஊர்காவற்றுறைப் பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் இன்றையதினம் ஆரம்பமாகியது.

ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களை பெற்ற சபைகளின் செயற்பாடுகள் 20 ஆம் திகதி; ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற உள்ளுராட்சி மன்ற ஆணையத்தின் அறிவிப்புக்கு இணங்க இன்று குறித்த சபையின் புதிய தவிசாளராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மருதயினார் ஜெயகாந்தன் மீண்டும் பதவியேற்றார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஊர்காவற்றுறை பிரதேச சபையில்; ஆட்சியமைக்கத் தேவையான ஆசனங்களை பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன், யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளா கா.வேலும்மயிலும் குகேந்திரன், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
ஊர்காவற்றுறை பிரதேச சபையை தொடர்ச்சியாக 3 ஆவது தடவையாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வென்றெடுத்ததுடன் குறித்த பகுதி மக்களுக்கும் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மேற்கொண்ட, மேற்கொண்டுவரும் சேவைகளுக்கு தொடர்ச்சியாக மக்கள் அங்கிகாரம் அளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: