இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை – பிரித்தானியா அறிவிப்பு!

Friday, June 4th, 2021

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரித்தானியாவால் இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிவப்பு எச்சரிக்கையில் ஆப்கானிஸ்தான் பஹ்ரேன் போன்ற நாடுகளும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகை தரும் நபர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த சிவப்பு எச்சரிக்கையானது எதிர்வரும் 8 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: