ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கா க நடைபவனி!
Sunday, April 21st, 2024யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்றையதினம் இடம்பெற்றது.
ஊர்காவற்றுறை ஆதாரவைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து நடைபவனியை ஏற்பாடு செய்ததுடன் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை என்பன பங்கேற்றது.
ஊர்காவற்றுறை வைத்தியசாலை நோயாளர் விடுதி ஒன்றை கட்டுவதற்கான நன்கொடைகளை கொடையாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வின் நிமித்தமும் மக்களுக்கான சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடத்தப்பட்டது.
இந் நடைபவனி யாழ் போதனா வைத்தியசாலையில் காலை 6 மணியளவில் ஆரம்பித்து பண்ணை வீதி வழியாக ஊர்காவற்றுறை வைத்தியசாலையை அடைந்தது.
000
Related posts:
படகுகளை விடுவிக்கும் எண்ணமில்லை - அமைச்சர் மஹிந்த அமரவீர
செல்வச்சந்நிதி மஹோற்சவ காலத்தில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் - பருத்தித்துறை பிரதேச செயலர் !
விரைவில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் - நாசா, மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகம் தகவல்...
|
|