மூவாயிரம் மொழி உதவியாளர்கள் அரச நிறுவனங்களுக்கு இணைப்பு!

Thursday, March 1st, 2018

அரச நிறுவனங்களுக்கு தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் பணியாற்றக்கூடிய மூவாயிரம் மொழி உதவியாளர்கள்  இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

இந்த நியமனங்களுக்காக விரைவில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்தெரிவித்துள்ளார்.

இதற்காக உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம் தமிழ்ஆகிய மொழிகளில் திறமை சித்தி பெற்றிருப்பது அவசியமாகும். இந்த விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள்அமைச்சு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக தெரிவு செய்யப்படும் 500 பேருக்கு ஆறு மாத பயிற்சி வழங்கப்படவிருக்கிறது எனவும் அரச நிறுவனங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்நோக்கும் மொழிப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது இதன் நோக்கம் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் அரச நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள். இதன் போது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவிருக்கிறது. பொலிஸ்நிலையங்கள் மாகாண சபைகள் பிரதேச செயலகங்கள் என்பனவற்றிற்கு மொழி உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

Related posts: