வட பகுதிக்கான புகையிரத நேர அட்டவணையில் நாளைமுதல் மாற்றம் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!
Friday, October 20th, 2023வட பகுதிக்கான ரயில் நேர அட்டவணையில் நாளை (21) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
அதனடிப்படையில் அநுராதபுரம்முதல் மாகோ வரையானரயில் தண்டவாளம் புனரமைக்கப்படவுள்ள நிலையிலேயே, ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கல்கிஸ்ஸைமுதல் காங்கேசன்துறை வரை செல்லும் ரயில் உள்ளடங்களாக அனைத்து வட பகுதிக்குமான ரயில் நேர அட்டவணைகள் நாளைமுதல் மாற்றப்படவுள்ளன.
இதேவேளை, வட பகுதிக்கான ரயில் சேவைகள் அடுத்த மாதம்முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொலையாளிகளின் மீது சிறைச்சாலையில் தாக்குதல்!
ஒரு லீற்றர் டீசல் 12 ரூபா நட்டத்திலே விற்பனை செய்யப்படுகின்றது - நாடாளுமன்றில் எரிசக்தி இராஜாங்க அம...
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க சீனா பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்ட...
|
|