ஊர்காவற்றுறையில் விளையாட்டு கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!
Wednesday, September 19th, 2018ஊர்காவற்றுறை பிரதேசத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விளையாட்டுப் பொருட்கள் வழங்கிவைத்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இளைஞர் விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர் கழகம் ஆகியவற்றுக்கே குறித்த விளையாட்டுப் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன
ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் அவர்களினால் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்தில் வைத்து குறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிகாரிகளின் அசமந்தமே மின்சாரத் தடைக்குக் காரணம்!
ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது: ஆவண நிழல் படத்தில் பொறிக்க வேண்டும் என்ற ...
இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் - கல்வி அமைச்சு எச்சரிக்கை...
|
|