உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலங்களில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Tuesday, August 8th, 2023உள்ளூராட்சி மன்றம், நகர சபை மற்றும் மாநகர சபை திருத்தச் சட்டமூலங்களில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த சரத்துகள் நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்;ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஜயந்த கட்டகொடவினால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
வித்தியா கொலை வழக்கு: மரபணு சோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு!
தீவுப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கற்றாளை செய்கை !
இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வ...
|
|