மது போதையில் தந்தையை தாக்கிய மகன் விளக்கமறியல்!
Tuesday, August 16th, 2016
தனது தந்தையையும் மைத்துனரையம் மதுபோதையில் தாக்கிய ஆசிரியரான மகனை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றப் பதில் நீதவான் என். தம்பிமுத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(14) உத்தரவிட்டுள்ளார்.
யாழ். புத்தூர் ஏரந்தனைப் பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் கடந்த மாதம் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தந்தையுடன் சண்டையிட்டுள்ளார். இதன் போது மதுபோதையில் தந்தையின் விரலைக் கடித்துத் துண்டாடியமையால் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து குற்றச் சாட்டப்பட்ட ஆசிரியரான 33 வயதுடைய மகன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மல்லாகம் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை 50 ஆயிரம் ரூபா பிணையில் சந்தேகநபரை விடுத்திருந்தது. வீட்டுக்கு வந்த குறித்த நபர் அன்றைய தினமிரவு மீண்டும் தந்தையையும் மச்சானையும் தாக்கியுள்ளார்.
இதனையடுத்துக் கடந்த சனிக்கிழமை சந்தேகநபரான ஆசிரியரைக் கைது செய்த அச்சுவேலிப் பொலிஸார் தாக்கிய குற்றச் சாட்டில் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை(14) மல்லாகம் பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது பதில் நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
Related posts:
|
|