உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகளை கையேடாக வெளியிட தேர்தல் ஆணைக்குழு திட்டம்!

Friday, February 16th, 2018

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பெறுபேறுகளை நூல் வடிவில் கையேடாக வெளியிடப்போவதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்ற தேர்தல்கள் மூலம் பொதுமக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க முடிந்துள்ளதையிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு மகிழ்ச்சியடைகின்றது. இதேவேளை அர்ப்பணிப்புடன் தேர்தல் பணிகளில் செயற்பட்ட ஊழியர் ஒருவரையும் தேர்தல்கள் ஆணைக்குழு இழந்துள்ளமை குறித்து மனவருத்தப்படுகின்றேன்.

இந்நிலையில் தேர்தல் பெறுபேறுகள் சனிக்கிழமை இரவு பத்துமணிக்குள்ளாக தயாராகிவிட்டது. எனினும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அதனைஊடகங்களுக்கு அனுப்பி வைப்பதில் தாமதமேற்பட்டது.

அதற்காக தேர்தல் ஆணைக்குழுவை குற்றம் சாட்டுவதில் பலனில்லை. அவ்வாறு குற்றம் சாட்டுவதாயின் என்னை மட்டும் குற்றம் சாட்டுங்கள் என்றும் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts: