உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை!
Friday, September 9th, 2016
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று(08) சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளுராட்சிமன்ற தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts:
இலங்கையில் இயங்கும் 43 தீவிரவாத அமைப்புக்களுக்கு வருகிறது தடை – தீவிர ஆலோசனையில் அரசாங்கம்!
இரண்டாம் கட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி கைச்சாத்து!
ஆசிரியர்கள் விதிகளை மீறாமல் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் : பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை!
|
|
|


