உரிய முறையில் நட்டஈடு கொடுக்கப்படவில்லை – அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம்!
Monday, May 20th, 2019
படைபுழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய முறையில் நட்டயீடு கொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நட்டயீட்டுத் தொகையை அரசாங்கம் மறந்துவிட்டதாகவும், அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நட்டயீட்டுத் தொகையை வழங்குவதில் முறைக்கேடுகளில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் போக செய்கையின் போது படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
Related posts:
பரீட்சை எழுத முன் வினாத்தாள்களை வாசிப்பதற்கு 15 நிமிடங்கள் !
கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளானது யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் - ஒருவர் பலி!
கேரளாவில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்துக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு...
|
|
|


