வாரத்தில் 3 நாட்கள் அரச ஊழியர்கள் அவசியம் அலுவலக கடமையில் ஈடுபடவேண்டும் – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Thursday, April 29th, 2021கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக வாரத்திற்கு 3 நாட்கள் அவசியம் வலுவலகத்திற்கு வருகை தந்து கடமையை நிறைவேற்ற வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
அத்துடன் எஞ்சிய 2 தினங்கள் விடுமுறை தினமாக கருத்தப்பட மாட்டாது. நிறுவன பிரதானியின் உடன்பாட்டிற்கு அமைய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சில பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள வகையில் மாதத்தில் 8 நாட்கள் மாத்திரம் அரச ஊழியர்கள் கடமையாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை தவறாகும் என்று அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ.ரத்னசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழின் பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் விபத்தில் பலி!
பொதுத் தேர்தலை பிற்போட அரசாங்கம் திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன!
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமை...
|
|