உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை ஜானதிபதியிடம் கையளிப்பு!
Tuesday, April 6th, 2021உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப் பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக் கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15 ஆம் திகதி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப் படைக்கப்படவிருந்த நிலையில், மேலதிக பரிசீலனைக்காக அமைச் சரவை குழு இரண்டு வார கால அவகாசத்தினை பெற்றிருந்தது.
இதற்கமைய குறித்த அறிக்கை நேற்று மாலை ஜனாதிபதியிடம் கைய ளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரி குப்த ரோஹணதீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உரிய முறையில் பயன்படுத்தினால் மழை நீரே பிரச்சினையைத் தீர்க்கும் வடக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ...
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு மாத்திரமே உள்ளது - தேர்தல் ஆணை...
ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!
|
|